விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தீயுடன் விளையாடிய இளைஞர்

சென்னை மதுரவாயல் அருகே உள்ள அயப்பாக்கத்தில் விநாயகர் ஊர்வலத்தின் போது, இளைஞர் ஒருவர் தீயுடன் விளையாடிய போது முகம் தீப்பற்றி எரியும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள் சிலர் தீபந்தம் ஏந்தி வாயில் மண்ணெண்ணெய் வைத்து தீயை ஊதிச் சென்றனர். அப்போது மணிகண்டன் என்கிற இளைஞரின் முகத்தில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மணிகண்டன் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவர் தீயுடன் விளையாடி முகம் தீப்பற்றி எரியும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version