வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இளைஞர் அத்துமீறல்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் குடிபோதையில் அத்துமீறி நுழைந்து தவறாக நடந்து கொண்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை நங்கநல்லூர், ரகுபதி நகரை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி தனலட்சுமி. இவர் வீட்டில் தனியாக இருந்த போது கதவை திறந்து அத்துமீறி உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.  அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், அந்த இளைஞரை பிடித்து பழவந்தாங்கல் காவல்நிலையதில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் தினேஷ் (எ) பீடி தினேஷ் என்பதும். குடிபோதையில் வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததாகவும் தெரிவித்தார்.தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
 

Exit mobile version