85-வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் மூதாட்டி சாதனை பயணம்!

விருதுநகரில் தள்ளாடும் வயதிலும் எவருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், தன்னுடைய உழைப்பில் வாழும் 85 வயது மூதாட்டி குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலன் தெருவில் வசித்து வருபவர் 85 வயது மூதாட்டி கலாதேவி. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தனது இளம் வயதிலேயே கணவனை இழந்த கலாவதி கடந்த 60 வருடமாக நைலான் நூல் மூலம் பொம்மைகள் செய்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகிறார்.

இதில் வரும் வருமானத்தின் மூலம் தனது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது மகன் மற்றும் மகள் கவனிப்பின்றி இருக்கும் மூதாட்டி அரசு தரும் ரூபாய் முதியோர் ஒய்வூதியத்தை வைத்து வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

வாழ்க்கைப் பயணத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இயலாத வயதில் கற்ற கைத்தொழில் மூலம், முருகன் பொம்மைகள்,மயில் பொம்மைகள் ,பைகள் போன்ற அலங்கார பொருட்களை செய்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.

85 வயது ஆன நிலையில் தன்னால் தொடர்ந்து உழைக்க முடியும் என்ற நிலையில் இருக்கும் இந்த மூதாட்டிக்கு , தமிழக அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..

Exit mobile version