திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை குத்திக் கொலை : குற்றவாளி கைது

திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பத்தில், இளைஞரை குத்திக் கொலை செய்தவரை, புட்லூர் ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

பெரியகுப்பத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான பொன்ராஜை தேடி வந்தனர். இந்நிலையில், பொன்ராஜ் புட்லூர் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொன்ராஜை மடக்கி பிடித்த கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இரு சக்கர வாகனம் வாங்கி விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் பொன்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை நடந்த இரண்டே நாளில் குற்றவாளியை கைது செய்த திருவள்ளூர் நகர காவல்துறைக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version