நீர்தேக்க பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி நீர்தேக்க பகுதியில் ஆடிப்பெருக்கையொட்டி குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். குமார் என்பவர் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், அங்குள்ள மீனவர்களின் உதவியுடன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version