மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்து : இளைஞர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், செஞ்சியைச் சேர்ந்த பிரசாத் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மேல்மருவத்தூர் நோக்கி சாலை விதிகளை மீறி வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிய பிரசாத், நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் பிரசாத் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து பிரசாத் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர்,மேற்கொண்ட விசாரணையில், சாலை விதிகளை மீறி விபத்தை ஏற்படுத்திய நபர், வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version