ஐநூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட இளைஞர்

அந்தியூர் அருகே இளைஞர் ஒருவர் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நஞ்சமடை குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது ஊரில், செல்வம் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கோழி ஒன்று விழுந்து விடுகிறது. கோழியை மீட்க 500 ரூபாய் கூலி தருவதாகவும் கிணற்றில் உள்ள கோழியை மீட்டுத் தருமாறும் செல்வம் கேட்டுள்ளார்.

500 ரூபாயை பெற்றுக்கொண்ட சக்திவேல் கிணற்றில் இறங்கி கோழியை பிடித்துக்கொண்டு கயிறு மூலமாக மேலே ஏறி வந்துகொண்டிருந்தார். அப்போது கிணற்றின் மேல் இருந்து ஒரு கல், சக்திவேல் தலை மீது விழுந்ததில் அவர் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இறந்தவரின் உடலை மீட்டனர்.

500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு குடும்பத்தை தவிக்க விட்டு சென்ற, சக்திவேலின் நிலையை எண்ணி பலரும் வருத்தப்பட்டனர். அவரது மனைவி மற்றும் குழந்தைகள், குடும்பத்தினர் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

Exit mobile version