தற்கொலை முயற்சி செய்த நண்பனை காப்பாற்ற சென்ற இளைஞர் பலி

பொன்னேரி அருகே தற்கொலை செய்ய முயற்சி செய்த நண்பனை காப்பாற்ற சென்ற இளைஞர், ரயில் மோதி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவமா நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், தன்னுடைய அரவிந்த் என்ற நண்பருக்கு கைபேசி மூலம் குரல் பதிவு அனுப்பியுள்ளார். அதில் தனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தன்னுடைய மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும் கூறி பதிவிட்டிருந்தார்.

இதை கெட்டு பதறிப்போன அரவிந்த், வெங்கடேஷை காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது, திருவாயற்பாடி அருகே, ரயில்வே பாலத்தில் நின்று கொண்டிருந்த வெங்கடேஷை காப்பாற்ற சென்ற போது, அரவிந்தின் கால்கள் தண்டவாளத்தில் சிக்கியது. அதே வேளையில், கடைசி நிமிடத்தல் மனம் மாறி, வெங்கடேஷ் பாலத்தில் இருந்து கிழே குதித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பாலத்தில் சிக்கிகொண்ட அரவிந்த ரயில் மோதி உயிரிழந்தார். நண்பனை காப்பாற்ற சென்ற அரவிந் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.

Exit mobile version