8 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி இளைஞர் கொலை செய்ய முயற்சி

மதுரையில் 8 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி இளைஞர் ஒருவர் கொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் கணேஷ்குமார் – ராஜலட்சுமி தம்பதி. இவர்களின் மூத்த மகள் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் உரிமையாளர் மகன், சிறுமி மீது மின்ஒயரை பாய்த்துள்ளார். மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்த சிறுமி, சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், கணேஷ்குமாரை உடனடியாக வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் பிரச்சினை செய்து வந்துள்ளார். கணேஸ்குமாரை குடும்பத்தை மிரட்ட அந்த இளைஞர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கிறார். சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version