விழுப்புரத்தில் சிசிடிவி கேமராக்களை அமைத்த இளைஞர் நற்பணி மன்றத்தினர்

விழுப்புரத்தில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒன்றிணைந்து அமைத்த 25 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் செயல்படும் பல்வேறு சமூகநல அமைப்புகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த ஊர்களின் முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் தமிழ் இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 25 சிசிடிவி கேமராக்களை அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பொருத்தி உள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த திறப்பு விழாவில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, இந்த சி.சி.டி.வி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.

Exit mobile version