கன்னியாகுமரியில் போதை மாத்திரை கடத்த முயன்ற வாலிபர் கைது

கன்னியாகுமாரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு போதை மாத்திரைகள் கடத்திய நபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரையிலிருந்து கேரளா செல்லும் புனலூர் ரயிலில் போதை பொருட்கள் கடத்துவதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாறசாலை என்ற பகுதியில் ரயிலில் உள்ளவர்களிடம் சோதனையிட்ட போது கொல்லத்தை சேர்ந்த அஜ்மல் என்பவர் தனது உடலில் மறைத்து போதை மாத்திரைகள் வைத்திருப்பது தெரியவந்தது.

அவருடன் இருந்த 2 பேர் தப்பியோடினர். அஜ்மலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்களை இந்த கும்பல் விற்பனை செய்தது தெரியவந்தது . இதனையடுத்து தப்பியோடியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version