குழந்தைகள் ஆபாசப் படத்தை பகிர்ந்த இளைஞர் கைது

செங்கல்பட்டு அருகே குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பழையசீவரம் கிராமத்தை சேர்ந்த சபரிநாதன், தடை செய்யப்பட்ட குழந்தைகளின் ஆபாச படத்தை தனது பேஸ்புக் அக்கவுண்ட்டில் பதிவிறக்கம் செய்து அதை நண்பர்களுக்கு செல்போனில் பகிர்ந்ததாக கிடைத்த தகவலையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, சபரிநாதன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இது போன்ற தவறுகள் செய்யும் நபர்களின் பட்டியலை சிபிசிஐடி சேகரித்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version