செங்கல்பட்டில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக இளைஞர் போக்சோவில் கைது

செங்கல்பட்டில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக இளைஞர் அணி பொறுப்பில் உள்ளவரை போலீஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு அருகேயுள்ள திருமனி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி முனியாண்டி மகன் ராபின்.  திமுக இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ள அவர், அதே பகுதியில் பால் கடை வைத்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 16 வயது மகளை ராபின் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒராண்டாக ராபினின் சில்மிஷத்தால் மனதளவில் பெரிதும் துன்புற்றிருந்தார் மாணவி.

கடந்த 15-ம் தேதி கொடூர மனம் படைத்த ராபினின் பாலியல் துன்புறுத்தலை, பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி, சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார்.

சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் ராபின் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், செங்கல்பட்டு மகளிர் காவல்நிலைய போலீசார் திமுக பிரமுகர் ராபினை பிடித்து தங்களுக்கே உரிய பாணியில் விசாரணை நடத்தினர்.

அதில், ராபின் இதுவரை 4 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

Exit mobile version