முகநூலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்ட இளைஞர் கைது

முகநூல் பக்கத்தில் இளம் பெண்களை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்ட பட்டதாரி இளைஞர், காவல்துறையினர் வீசிய வலையில் சிக்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சி பகுதியை சேர்ந்த முகமது என்பவர், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் முகநூல் பக்கத்தில் போலி கணக்குகளை உருவாக்கி, தன்னுடன் பணியிடங்களில் பழகும் பெண்கள், தோழிகளிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர், தனிப்படை அமைத்து ஜெய்ஷ்-இ-முகமது என்ற இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் தனது குடும்ப உறுப்பினர்களையும் தவறாக சித்தரித்து போலியான முகநூலில் பதிவிட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குற்றவாளி முகமது புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version