கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற இளைஞர் கைது

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற இளைஞரை போதை தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

இடுக்கி மாவட்டம் ராஜகாடு வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை தடுப்பு பிரிவினர் ராஜகாடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட தொடுபுழா பகுதியைச் சேர்ந்த விபின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Exit mobile version