விருத்தாசலத்தில் சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் கைது

விருத்தாசலத்தில் 17 வயது சிறுமியை மும்பைக்கு கடத்திச் சென்ற இளைஞரைப் போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுமுறையில், தனது தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறிச் சிறுமியை மும்பைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மும்பை சென்ற போலீசார் கணேசைக் கைது செய்ய முயன்றபோது அவர் தப்பி ஓடி விட்டார்.  சிறுமி மட்டும் மீட்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த கணேஷ் சிறுமியை மீண்டும் கடத்த முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் கணேசைக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். 

Exit mobile version