பாதுகாப்பு கவசம் இல்லாமல் ஏரியில் செல்பி எடுத்து அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் பாதுகாப்புக் கவசம் இல்லாமல் ஆபத்தான முறையில் படகு சவாரி செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்லில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி மேற்கொண்டு இயற்கையின் அழகை கண்டு ரசிப்பதற்கு பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏரியில் படகில் சவாரி செய்யும் போது பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பு கவசம் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் சில இளைஞர்கள் அந்த பாதுகாப்பு கவசத்தை அணியாமல் அலட்சியமாக செல்வதையும், படகின் வெளிபுறத்தில் செல்பி எடுப்பதும் போன்ற ஆபத்தான நிலையில் படகு சவாரி மேற்கொள்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான முறையில் படகு சவாரி செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version