ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும் இளைஞர்- பல்வேறு தரப்பினர் பாராட்டு

தரங்கம்பாடி அருகே வறுமையிலும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் இளைஞருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் பெரம்பூரைச் சேர்ந்தவர் பாரதிமோகன். கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், தனது வீட்டிலேயே உணவு சமைத்து, அதனை பூம்புகார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மயிலாடுதுறை,
வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். மேலும் இவருக்கு முகநூல் நண்பர்களும் நிதிகொடுத்து உதவிசெய்து வருகின்றனர். வறுமையிலும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும் பாரதிமோகனுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

Exit mobile version