இளைஞர்கள் விரும்பி சாப்பிடும் இயற்கை உணவு

ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இயற்கை உணவு தான் சிறந்தது என்பதை உணர்ந்து, மதுரையில் பழைய கால உணவுகளை தேடி சென்று உண்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்றைய சூழல்நிலையில், ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு பழைய கால உணவு பழக்கம் தான் சிறந்தது என்பதை வலியுறுத்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வயதான தம்பதியினர், இயற்கை உணவான கம்மங்கூழ், தக்காளி கூட்டு, பச்சை மிளகாய், மோர், வத்தல் செய்து விற்பனை செய்துவருகின்றனர். 15 ரூபாய்க்கு விற்கப்படும் இயற்கை உணவு வகைகளை அதிகளவில் இளைஞர்கள் தேடிவந்து விரும்பி வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். மேலும், வயதான தம்பதியினருக்கு உதவும் வகையில் இளைஞர்கள் சிறுதானிய உணவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இளைஞர்கள் இந்த செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Exit mobile version