கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு மண் சட்டியை தலையில் அணிந்து இளைஞர் எதிர்ப்பு

புதுச்சேரியில், கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இளைஞர் ஒருவர் மண் சட்டியை தலையில் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

புதுச்சேரியில், கட்டாய ஹெல்மெட் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும், அவர்களது வாகன எண்ணை பதிவு செய்த போலீசார், நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐயனார் என்பவர், தலையில் மண் சட்டியை அணிந்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் 20 கிலோ மீட்டர் வேகத்திற்குமேல் இயக்க மாட்டார்கள் என்றும், நகர் பகுதியில் ஹெல்மெட் இன்றி செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

Exit mobile version