ஐதராபாத்தில் போதையில் பெண் காவலர்களை தாக்கிய இளம்பெண்

ஆந்திரா மாநிலம் திருப்பதி சாலையோரம் போதையில் மயங்கி கிடந்த, மென்பொருள் நிறுவனத்தில் பணி புரியும் இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் .

ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள சாலையோரத்தில் நவ நாகரீக பெண் ஒருவர் குடிபோதையில் விழுந்து கிடந்துள்ளார். இதனை கண்ட காவல்துறையினர் அந்த பெண்ணை பாதுகாப்புக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். சில மணி நேரம் கழித்து போதை தெளிந்தவுடன் என்னை ஏன் காவல்நிலையம் அழைத்து வந்துள்ளீர்கள் என்று பெண் காவலர்களை தாக்கி உள்ளார். காவலர்களை தாக்கியதற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த லீசா என்பதும், ஐதராபாத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

Exit mobile version