பிரேசில் நாட்டில் பள்ளிக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை தாக்கிய இளைஞர்

பிரேசில் நாட்டில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து மூன்று குழந்தைகளையும், இரண்டு ஊழியர்களையும் கொன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சான்டா கேட்ரினா ((Santa Catarina)) நகரில் செயல்படும் மழலையர் பள்ளிக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த இளைஞர், கண்ணில் பட்ட குழந்தைகளை கடுமையாக தாக்கினார்.

 

இதை தடுக்க வந்த ஆசிரியர்கள் மீதும் அந்த இளைஞர் தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று குழந்தைகளும், இரண்டு ஊழியர்களும் உயிரிழந்தனர்.

Exit mobile version