பொருளாதார ரீதியாக பாதித்திருப்பதால், முடக்கப்பட்ட பணத்தை மீட்க பப்ஜி மதனின் மனைவி வழக்கு

சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள மூன்று கோடி ரூபாய் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என பப்ஜி மதனின் மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் பெண்களை இழிவுப்படுத்தி பேசி யூ டியூபில் பதிவிட்டதாக பப்ஜி மதன், உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து, இருவரின் வங்கிக் கணக்குகளில் இருந்த சுமார் 4 கோடி ரூபாய், காவல்துறையினரால் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட மதனின் மனைவி கிருத்திகா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால், வங்கி கணக்கில் உள்ள பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், மதனிடம் பணத்தை பறிகொடுத்த மக்களுக்கு திருப்பி கொடுக்கவே வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பப்ஜி மதனின் மோசடி குறித்த ஆதாரங்களை, வரும் 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version