அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அனல் காற்றின் தாக்கம் குறைந்து காணப்படும் என்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 4 சென்டி மீட்டர் மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் தரும்புரி மாவட்டம் பாலகோட்டில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்து வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version