பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

2019-20ம் ஆண்டு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இணையதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு மாணவர்கள் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதிப்பெண் சான்றுகளும் இன்று வழங்கப்படுவதால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version