சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பேரவையில் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியனுக்கு பதிலளித்த அமைச்சர், உடல் ஆரோக்கியத்திற்கும், முகப்பொலிவுக்கும், கோபத்தை கட்டுப்படுத்தவும் யோகா அவசியம் என்றார். வரும் காலங்களில் உள்ளாட்சித்துறை அமைச்சருடன் ஆலோசித்து சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Exit mobile version