காவல்துறை அதிகாரிகளுக்கு ZOOM செயலி மூலம் யோகா பயிற்சி!

ஜூம் செயலி மூலமாக காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தினமும் ஜூம் செயலி மூலம் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் யோகா பயிற்சி அளிக்கப்படுவதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னதாக யோகா பயிற்சியை தொடங்கி வைத்த ஆணையர், தானும் பங்கேற்று யோகா பயிற்சி செய்தார். காவல்துறை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உள்ளிட்ட 950 க்கும் அதிகமானோர் யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Exit mobile version