யோகா பயிற்சியில் சாதனை படைக்கும் ஆசிரியை

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த யோகா பயிற்சி ஆசிரியை பவித்ரா என்பவர், யாரும் முயற்சிக்காத ராஜக் அபோத்தா ஆசனத்தை செய்து சாதனை படைத்துள்ளார்.

ஈரோட்டில், மாணவ – மாணவியர்களுக்கு யோகா பயிற்சியை கற்று கொடுத்து வரும் பவித்ரா, யோகா பயிற்சியில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இந்த நிலையில், இதுவரை யாரும் முயற்சிக்காத ராஜக் அபோத்தா ஆசனத்தை அவர் உலக சாதனைக்காக செய்தார். 10 நிமிடங்கள் தொடர்ந்து மூச்சை அடக்கி அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவரது இந்த சாதனையை நோபிள் உலக சாதனை குழுவினர் அங்கிகரீத்தனர். இதுபோன்று சாதனை படைப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பவித்ரா கூறினார்.

Exit mobile version