சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீரில் மிதந்தபடி யோகாசனம்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ராமேஸ்வரத்தில் நீரில் மிதந்தபடி இருவர் யோகாசனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாக் ஜலசந்தியில் தண்ணீரில் மிதந்தபடியே இருவர் பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து ஆச்சரியப்படுத்தினர். தண்ணீரில் யோகசானம் செய்வதால் உடலுக்கும் மனதிற்கு புத்துணர்வு அதிகரிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்

இதேபோல் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த பெண் ஒருவர், நீரில் மிதந்தபடி யோகாசனங்களை செய்தார். நீரில் மிதந்த படி, பல்வேறு யோகாசனங்களை செய்தி அசத்தினார்.

Exit mobile version