திண்டுக்கல் பகுதிகளில் செவ்வந்திப்பூக்களின் விளைச்சல் அமோகம்

திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வந்திப் பூக்களின் விளைச்சல் அமோகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அதிகாரிபட்டி, சிலுவத்தூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழை இல்லாததால் பூக்கள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தாண்டு, மழை அவ்வப்போது பெய்ததால், செவ்வந்திப் பூக்களின் விளைச்சல் அமோகமாக உள்ளது. திருமண முகூர்த்தங்கள் மற்றும் திருவிழாக்கள் காரணமாக செவ்வந்திப் பூக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின்றன. என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version