ஏமன்…திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 21பேர் உயிரிழப்பு!

ஏமன் நாட்டில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 21பேர் உயிரிழந்தனர். அல்லுஹேயா கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெண்கள், சிறுவர்கள் உட்பட 21பேர் படகில் சென்றனர். படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கவிழ்ந்ததில் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவலறிந்த கடலோர காவல்படையினர் அங்கு செல்வதற்குள், 12 பெண்கள், 7 சிறுவர்கள், 2 ஆண்கள் என 21பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

Exit mobile version