இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேனி வருகை !

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மற்றும் கூடலூர் நகர் கழக செயலாளர் அருண்குமார் ஆகியோரது இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டம் வந்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, தேனி அன்னஞ்சி புறவழிச்சாலை பிரிவு அருகே, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ,மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து திருமண நிகழ்வில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை ஆசீர்வதித்துப் பேசுகையில், திருமண வாழ்க்கையை துவங்குகிற மணமக்கள் எல்லா செல்வங்களையும் இறைவனின் அருளால் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரு தலைவர்களின் வாழ்த்துக்களுடன், என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Exit mobile version