கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

பாபநாசம் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 800ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு பயிர்களை ஒரு விதமான மஞ்சள் நோய் வைரஸ் தாக்கியதால் கரும்புகள் வளர்ச்சி இல்லாமல் பூச்சிகள் தாக்கியதால் கரும்புகளை வயல்களிலேயே அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கில் செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version