பிரதமர் நரேந்திர மோடியை, கர்நாடக முதல்வர் எடியூரப்பா டெல்லியில் நாளை சந்தித்து பேச உள்ளார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக பிரதமரை எடியூரப்பா சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின் போது, கர்நாடக மாநிலத்திற்கு நிலுவையில் உள்ள நிதிகளை கோர எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். அமைச்சரவை குறித்தும் அவர் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் எடியூரப்பா சந்திக்க உள்ளார்.