புதுச்சேரியில் 29 காவல் நிலைய அதிகாரிகளுக்கு எழுத்து தேர்வு

புதுச்சேரியில் உள்ள 29 காவல் நிலையங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

துப்பறியும் திறன், சைபர் கிரைம், சட்ட விதிகள் ஆகியவை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. தேர்வு எழுதிய 29 பேரில் 26 பேர் ஏ கிரேடு பெற்றுள்ளதாக ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். அவர்களுக்கு பாராட்டு கடிதம் ராஜ் நிவாசில் இருந்து அனுப்பப்படும் என்றார். திருபுவனை காவல் நிலைய அதிகாரி பிரியா மற்றும் முதலியார்பேட்டை காவல் நிலைய அதிகாரி பாபுஜியும் தேர்வில் சிறப்பிடத்தை பெற்றனர். காவல் அதிகாரிகளுடன் பேசும்போது, மற்ற பிரச்சனைகள் குறித்து தெரிய வந்ததாகவும், அடிப்படையில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் கிரண்பேடி குறிப்பிட்டார்.

Exit mobile version