விருதுநகர் மாவட்டத்தில் பொய்துப்போன பருவமழை : கருகிய பருத்தி

போதிய மழை இன்றி பருத்தி பயிர்கள் கருகி போனதாக, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுடி செய்துள்ளனர். இந்த நிலையில் பருவமழை பொய்த்துப் போனதால் பருத்திச் செடிகள் முற்றிலும் காய்ந்து சேதம் அடைந்தன.

இதனால், சாகுபடிக்கு செலவிட்ட பணத்தைக் கூட ஈட்ட முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து ஆய்வு செய்து, அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version