2019 ஆம் ஆண்டு இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்கள் யார் யார் ?

2019 ஆம் ஆண்டு இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்களை பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கணித்துள்ளது.

உலக அளவில் பிரபல இதழான ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவில் இந்தாண்டு சக்தி வாய்ந்த பெண்களாக வலம் வருபவர்களை கணித்துள்ளது. அதன்படி பிரபல குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம், பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், பிரபல நீச்சல் வீராங்கனையான பாக்டி ஷர்மா, அடியுவோ தோல் பரிசோதனை நிலையத்தின் இயக்குனரான கீதாஞ்சலி ராதாகிருஷ்ணன், டெர்ரா நிறுவனத்தின் தலைவரான ராஜலக்ஷ்மி மற்றும் ட்ரான்ஸ்செல் நிறுவனத்தின் தலைவர் சுபத்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

என்.ஆர்.பி.நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ்பீனா, சீமாட்டி ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் இயக்குனர் பீனா கண்ணன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

Exit mobile version