தங்கத்தாலான உலகின் மிகச்சிறிய வாக்குப்பதிவு இயந்திரம் – அசத்தும் கைவினை கலைஞர்!

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, புதுக்கோட்டையை சேர்ந்த கைவினைக் கலைஞர் ஒருவர், உலகின் மிகச்சிறிய வாக்குப் பதிவு இயந்திரத்தை தங்கத்தால் செய்து அசத்தியுள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த கைவினைக் கலைஞரான வீரமணி, 8 மணி நேரம் செலவிட்டு, இரண்டரை கிராம் எடையுள்ள தங்கத்தை பயன்படுத்தி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை தயாரித்துள்ளார். நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, அவர் எடுத்த புதிய முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வீரமணி ஏற்கனவே சிறிய அளவிலான கால்பந்து, மாங்கல்யம் மற்றும் கொரோனா தோடு போன்றவற்றை தங்கத்தால் உருவாக்கி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version