மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்தநிலையில் பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நட்பை பலப்படுத்துவது தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் மகிர்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இன்ரான்கான் ஆகியோர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version