உலக துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு உற்சாக வரவேற்பு

உலக துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் தொடரின் இறுதிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்தார். பதக்கம் வென்ற பிறகு தனது சொந்த ஊரான கடலூருக்கு வருகை தந்த அவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தங்கம் வென்ற தனக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தன்னை ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் இளவேனில் தனது நன்றியினை தெரிவித்தார். தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் எனவும் அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version