காளையர்கோவிலில் உலக மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி சிறப்பு மாணவ, மாணவிகள் விளையாட்டுப்போட்டி 

உலக மாற்று திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக காளையர்கோவில் அருகே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் காளையர்கோவிலில் உலக மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 12 பள்ளிகளை சேர்ந்த சிறப்பு மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஓட்டப்பந்தயம், கோலி குண்டு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

 

 

Exit mobile version