உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் சவால் வாய்ந்தது : கேப்டன் விராத் கோலி

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் சவால் வாய்ந்தது என்று இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 30ஆம் தேதி துவங்கவுள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய விராத் கோலி, இந்திய பந்துவீச்சாளர்கள் தயாராக உள்ளனர் என்றும், நம்பிக்கையுடன் உலக கோப்பை தொடரை எதிர் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய ரவி சாஸ்திரி, அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை டோனி அளித்து வருவதாக தெரிவித்தார். தோனிக்கும், அணித் தலைவர் கோலிக்கும் இடையேயான உறவு சிறப்பாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version