கொரோனா காரணமாக உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்தி வைப்பு!!

2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகள் கொரோனா பரவலின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அணிகள் போட்டியில் நேரடியாக பங்கேற்க உள்ள நிலையில், வளர்ந்து வரும் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் இந்தாண்டு செப்டம்பர் மாதம் நமீபியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், அமெரிக்கா, நமீபியா, பப்பூவா நியூகினியா, உள்ளிட்ட நாடுகள் பங்கேற்க இருந்த நிலையில் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அதேபோல், இளையோருக்கான உலக கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகள் இந்தாண்டு ஆகஸ்ட் 7 முதல் 14 ஆம் தேதி வரை தான்ஸானியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், கென்யா, ரூவாண்டா, தான்ஸானியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்க இருந்த நிலையில் இந்த போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version