உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற வீராங்கனை

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் தமிழக அரசு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருவதாக கூறினார்.

ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருவதாக கூறிய இளவேனில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இளவேனில் வாலறிவன் குறிப்பிட்டார்.

Exit mobile version