ஜோர்டானுக்கு வருகை தந்த உலக கோப்பையை அந்நாட்டு வீரர்கள் கண்டு ரசித்தனர்

உலக கோப்பை கூடைப்பந்து போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜோர்டானுக்கு வருகை தந்த உலக கோப்பையை அந்நாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

உலக கோப்பை கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கூடைபந்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் நாடுகளில் உலகக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜோர்டான் தலைநகர் அம்மானிற்கு வருகை தந்த கோப்பை அந்நாட்டின் கூடைப்பந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆர்வத்துடன் வரவேற்றனர். ஜோர்டர் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், வீரர்களுடன் ஏராளமான ரசிகர்களும் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version