உலக செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு ஊக்கத்தொகை

உலக தனிநபர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜெனிதா ஆண்டோவிற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் 20 லட்ச ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

ஸ்லோவேகியா நாட்டில் நடைபெற்ற 19 வது உலக தனிநபர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஜெனிதா ஆண்டோ தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவரை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊக்கத் தொகை வழங்கினார். இதேபோல், ஆசிய நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விகாஸ், ஆதித்யா, ஜெயவீணா ஆகியோருக்கு தலா 2 லட்ச ரூபாய் ஊக்கத் தொகையை முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version