கோவையில் காட்டு யானைகள் அட்டகாசத்தால் தொழிலாளர்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்டம் குடியிருப்பை 2 காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது.

வால்பாறை அருகே உள்ள சின்கோனா எஸ்டேட் பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி திரிந்தது. இந்த நிலையில், அதிகாலை 4 மணி அளவில், ராஜ்குமார் என்பவர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்த யானைகள், வீட்டில் இருந்த டிவி, பீரோ கட்டில் சமையல் பொருட்கள் என அனைத்தையும், சேதப்படுத்தியது. வீட்டில் இருந்தவர்கள், வெளியூர் சென்று இருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. காட்டு யானைகளின் அட்டகாசம் குறித்து, அப்பகுதி மக்கள் வனதுறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த, வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Exit mobile version