அரசுக்கு மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை

காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் – கிருஷ்ணராயபுரம் காவிரி கரையோரங்களான மாயனூர், லாலா பேட்டை மகாதானபுரம், உள்ளிட்ட பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி வந்தனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் மணல் அள்ள நீதி மன்றம் தடை விதித்தது .இதனால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக வேதனை தெரிவித்தனர். அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கிய நிலையில் மாயனூர் பகுதியில் உள்ள காவிரியிலும் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version