பந்தலூரில் காட்டு யானை தாக்கியதில் தோட்ட தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில் காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தனியார் தோட்ட தொழிலாளி ஒருவரை ஒற்றைக் காட்டு யானை துரத்திச் சென்று தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதே போல், தேவர்சோலையை அடுத்த நெல்லி குன்னு கிராமத்திலும் காட்டு யானைகள் துரத்தியதில் கீழே விழுந்து காயமடைந்த இரண்டு பேர், கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் நீலகிரி காட்டு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version