சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் : எஸ்.பி.வேலுமணி

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று உள்ளார்.

விழாவில் கலந்து கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு நாள் பயிற்சி வகுப்பிற்கான கையேட்டை அனைவருக்கும் வழங்கினார். அதனை தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புதிதாக தேர்வு பெற்றுள்ள நபர்கள் ஒரு சேவையின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து அதனை தீர்த்து வைக்கக் கூடிய அமைப்பாக மக்களுடன் நெருங்கிப் பழகி சேவையாற்ற வேண்டும் என அமைச்சர் கூறினார்.

Exit mobile version